Thursday, May 31, 2007

<> கடைசிவரை...<>

கடைசிவரை...
உன்னை என் உதடுகள்
ஒவ்வொரு
முறையும் முத்தமிட்ட போது,
மொத்தமாய் இன்பம்
என எண்ணினேன்!
நான்உன்னைச்

சுவைக்கும்
ஒவ்வொரு
முறையும்நீ,
என் கண் முன்னே
உதிர்த்தசாம்பல்....
நீயும்
இப்படித்தான்
சாம்பலாகப் போகிறாய்
என்றுணர்த்தினாய்!

நான் தான்
அதைஉணராது போனேன்!?
இழுக்க இழுக்க இன்பம் தானே

என்று தான்எண்ணினேன்...

இழுக்க, இழுக்க
என்ஆயுளைக்
குறைத்துக்கொண்டிருக்கிறாய்
என்பதை
அறியாமற் போனேன்!?

என்விரல்கள்
சுட்டபோது கூட
உனைப் பிரிய
மனமில்லாதிருந்தேன்..."

நீ "விரைவில்
சுடுகாட்டில்
சுட்டெரிக்கப்படுவாய்
என்றுணர்த்தினாய்
என்பதை
மட்டும்
கடைசிவரைநான்
அறிந்திருக்கவே இல்லை!?

No comments: