Tuesday, October 02, 2007

காந்தி ஜெயந்தி


காந்தியின் புதிய வேதம்



காலவரலாற்றில், காலம் கற்பமாகி வெற்றியாளர்களை


பிரபஞ்ச வெளியில்பிரசவிக்கிறது. அந்தவகையில்
வளர்பிறைபோல் வரலாற்று வாசற்படியில்வந்துதித்த
வர்தான் மகாத்மா காந்தியடிகள்.

நேர்மை, உண்மை, எளிமை இன்னும் எத்தனையோ
கற்றுக்கொள்ளும் பாடங்கள்அவரிடம் அதிகம்; ஆனால்,
நாம் குரங்குகள் சொல்லும் தத்துவங்களை விட்டுவிட்டு,
குரங்குகளை மட்டும் எடுத்துக்கொண்டோம்;

தேச எல்லைகளை எல்லாம் கடந்துஎல்லோர் உதடுகளும்

அதிகமாக உச்சரித்த பெயர் காந்தியாகத்தானிருக்கும்.
தன் வாழ்க்கையில் சோதனைகளையும், வேதனைகளையும் அவமானங்களையும், தழும்புகளையும்சகித்துக்கொண்டு

மக்களுக்காக உழைத்தார். அவர் அஹ’ம்சைக்கு தென் ஆப்பிரிக்காவில்முதல் வெற்றி கிடைத்தது.

காந்தி இந்தியாவில் கால் பதித்தவுடன் காலனி
அரசுக்கு காலன் பிடித்துவிட்டான். தொடர்

போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், உப்பு

சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், வெள்ளையனே

வெளியேறு இப்படி பல்வேறு சாத்வீகப் போராட்டம்...
ஆங்கிலேயர்களின் உள்ளத்தில் அச்சத்தை விளைவித்தது.

இத்தனை மனித சக்தியை எப்படி ஒன்றினைத்தார்?

எதனால், எவையால்? என்ற கேள்விகள் ஆங்கிலேயரை
துளைத்தன. அன்பினால், தன் எளிமையினால், சத்தியத்தால் கவர்ந்தார்என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு- எத்தனை உண்மை?

லட்சக்கணக்கான மக்கள்கூட்டத்தில்அமைதி என்றவுடன் எங்கு போனது அத்தனை சத்தம்? தன்னைப் பார்க்கஅலைஅலையாய், அணிஅணியாய் மக்கள், காந்தி என்ற மந்திர சக்தி மக்கள் சக்தியாய் ஈர்த்தது. மகத்தான மனிதன் மண்ணுக்கு வந்ததே மனிதர்கள் செய்த தவம் என்று சொல்லலாம்.காலம்தான் தோள்களில் தூக்கி மாலையிட்டது; மகுடத்தை தந்த போதும் மக்கள் மனதில் இருந்தாலே போதும் என மறுத்த காந்தியைப்போல் உலகத் தலைவர்கள் எவரும் இல்லை.

எல்லா மதங்களும் சொல்கின்றன. அன்பு செய், அரவணை என்று.
ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ மறு கன்னத்தைக் காட்டு என்றது மதம்;

நீ துன்புறுத்தாதே, உன்னை துன்புறுத்தினால்பொறுத்துக்கொள் என்பதே காந்தியின் புதிய வேதம்!

காந்தியடிகள் மக்களுக்கு எதைச் சொன்னாரோ, எதைப் போதித்தாரோ அதன் படியேஅவரும் நடந்தார். சொல்லுக்கும் செயலுக்கும் அவர் ஒருபோதும் முரண்பாடாகவோவேறுபாடாகவோ நடந்துகொண்டதில்லை;

அப்போது காந்தி வார்தாவில் இருந்தார். அது ஒரு சிறு நகரம்.
எல்லா வசதிகளும் கொண்டது.மற்றவர்களை கிராமங்களுக்குப்
போகச் சொல்லிவிட்டுத் தாம் மாத்திரம் ஒரு பட்டணத்திலிருந்தால் அது நன்றாயிருக்குமா?- இது அவர் மனத்தை உறுத்தியது.

தாமும் ஒரு கிராமத்திற்குகுடியேற விரும்பினார்.

உடனிருந்தவர்கள், " ஒரே ஒரு கிராமத்துக்காகமட்டும் நீங்கள் உழைக்கவில்லை, முழு இந்தியாவுக்கும் உழைக்கிறீர்கள்.
வசதி இல்லாத கிராமத்துக்குநீங்கள் போனால் வேலைகள்
தடைப்படும். இப்படி ஏதேதோ சொல்லி காந்தியை தடுத்துப்
பார்த்தனர். சொன்னதை நான் செய்கையில் கடைப்பிடிக்க
வேண்டாமா? என்று கூறிஅவர்கள் வாயை அடைத்தார்.

வார்தா நகரிலிருந்து காந்தி, சேவா கிராமத்துக்குப் போன,
புதிது. அவ்வூர்ப் பாதை ஒரு காட்டுப்பாதை. புழுதியும் மண்ணும் படிந்ததாய் இருக்கும். நடந்து போனால் கல்லும் முள்ளும் காலில் குத்தும். மாட்டு வண்டியில் போனால் இடுப்பு ஒடிந்து போகும்.

அப்படியிருந்தும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அவரைப்
பார்க்கப் பலர் வந்த வண்ணமிருந்தனர்.

ஒருநாள் சில ஊழியர்கள் காந்தியிடம் சென்று " தாங்கள் அரசாங்கத்துக்கு ஒரு வரி எழுதிப்போடுங்கள். நல்ல சாலை போட்டுவிடுவார்கள் என்றார்கள். காந்தி அதற்கு

இணங்கவில்லை;இது மக்கள் செல்லும் பாதை இதன்

வழியே போகிறவர்களும் வருகிறவர்களும் நாம் தானே?

ஆகையால் இந்தப் பாதையை செப்பனிடும் வேலையையும் நாமே செய்ய வேண்டும் என்றார்.
அதெப்படி முடியும்? என்று கேள்வியெழுப்பினர் ஊழியர்கள்.

" மிக்க எளிது. வார்தாவிலிருந்து இங்கு வருபவர்கள் தலைக்கு
இரண்டு கல்லைக் கொண்டு வந்து போட்டால் பாதை அமைத்து விடலாம் " என்றார் காந்தி.ஊழியர்களுக்கு இந்தக் கருத்து வினோதமாயிருந்தது. அவர்கள் சிரித்தார்கள். இரண்டு கற்கள்கொண்டு வந்து போட்டால் பாதை எப்படிச் சரியாகும்? என்றார்கள் அவர்கள்.

முழுமனதுடன்செய்தால் எந்த வேலையையும் நாம் செய்து முடித்து விட முடியும் என்றார் காந்தி.
ஊழியர்களுக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் மறுநாள் முதல் அந்த யோசனை நடைமுறைக்கு வரத்துவங்கியது. வார்தாவிலிருந்து சேவா கிராமத்துக்குப் போகிறவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு கற்களை தங்களுடன் எடுத்து வந்து போட்டார்கள். பலருக்கு இது வேடிக்கையாகத்தானிருந்தது. ஆனால் காந்தி எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பெரிய பெரிய தலைவர்களும் அரசியல்வாதிகளும்கூட
காந்தியைப் பார்க்கச் சென்ற போதெல்லாம்கற்களை
எடுத்துகொண்டு போய் அங்கு போடத்தவறுவதில்லை.
காந்தியும் அவர்களுடையவாழ்க்கைத் துணைவியாருமான
கஸ்தூரி பாயும் கூட அவ்விதமே செய்து வந்தார்கள்.


கற்குவியல் பெருகிக் கொண்டே வந்தது.ஒரு நாள்

ஆசிரமவாதிகளுள் ஒருவர் சொந்த வேலையாய்த் தம்
ஊருக்குப் புறப்பட்டுப் போனார்.சில மாதங்கள் கழித்துத்
திரும்பி வந்த போது வார்தாவிலிருந்து சேவா கிராமத்துக்குச்
செல்லும் அந்தப் பாதை பட்டணத்துச் சாலை போலாகியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார்.

இருகல், இரு கல் ஒரு சாலை. இது தான் காந்தி நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.

சுவாமி விவேகானந்தர் சொல்றார்," ஏழைகளின் துயரக் கண்ணீர் கண்டு எவன் இரக்கக்கண்ணீர் வடிக்கிறானோ, அவனே மகாத்மா; மற்றவர்கள் துராத்மாக்கள் " என்கிறார்.
மகாத்மாவை பற்றிக் கேட்டோம்... துராத்மா....

நம்ம ஊர் அமைச்சர் ஒருத்தர்;

காந்தியவாதியாகவேகாட்சியளிப்பவர்.

அயல் நாட்டுல மகாத்மாவுக்காக ஒரு விழா எடுக்கிறோம்; அவசியம்வந்து கலந்து சிறப்பிக்கணும்னு அமைச்சரைக் கேட்டுக்கிட்டாங்க. அமைச்சரும்ஒப்புக்கொண்டு அந்த நாட்டுக்குப் போனார்.
அங்க மகாத்மாவின் உருவச் சிலையைத் திறந்துவச்சுட்டு

மக்கள் மனசு நெகிழப் பேசினார். விழா முடிஞ்சுது. அந்த நாட்டினர், அமைச்சரைபாராட்னாங்க. அவருடைய எளிமை, நடை,உடை,பேச்சு இப்படி எல்லாத்தையும் புகழ்ந்துபேசுனாங்க. ஒரு வாரம் அந்த நாட்டிலேயே தங்கி சுத்திப் பாத்துட்டு அமைச்சர் தாய் நாடுதிரும்புனார்.

விமான நிலையத்துல ராத்திரி முழுக்க கண் விழிச்சு அதிகாலையில் வரும்அமைச்சரை வரவேற்க தொண்டர்கள் காத்து இருந்தனர்.

அமைச்சர் விமானம் தரை இறங்குச்சு. விமானத்தில வந்தவங்கள்லாம் வெளிய போய்க்கிட்டுஇருந்தாங்க. அமைச்சர் வெளியவர்ற வழியைக் காணோம். அப்பறமாத்தான் தெரிஞ்சுது.அமைச்சரை கஸ்டம்ஸ்ல உக்கார வச்சுட்டாங்கன்னு. விசாரிச்சா.... அவரு காந்திசொன்னததான் செஞ்சிருக்கார்.

என்ன ஒரு சின்ன வித்தியாசம்.

அமைச்சர் கொண்டுவந்ததும் ரெண்டு கல்லுதான்; ஆனா
அது சாலை போட அல்ல...

அவரோட மனைவி காதுல போடக் கொண்டு வந்த

ரெண்டு வைரக் கல்...!?